யான் அகத்தியத்தில் எழுதும் முன்னரே அவருடைய எழுத்தைப் படித்திருக்கிறேன். பல பழைய நூற்களை பதிப்பித்திருக்கிறார். நல்ல படிப்பாளி! நிறைய புத்தகங்களை சேர்த்தும் வைத்திருக்கிறார். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பிறவிப் பயனே!
அகத்தியத்தில் எழுத ஆரம்பித்தபின் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மிக சுருக்கமாக எழுதுவார். "திருவள்ளுவர் சமணர்" என்ற தொடர் எழுதும்போது எங்கள் நட்பு வளர்ந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு இந்துவானவர் திருக்குறள் சமணம் சார்ந்தது என்று துணிந்து கூறுவதோடு மட்டுமல்லாமல் அந்த கருத்தில் கடைசிவரை உறுதியாக இருக்கிறார் என்றால் அது பெரிய விஷயம். யாருக்கும் அந்த மனசு வராது.
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன்னுடைய "திருக்குறள் - புதிய உரை" என்ற புத்தகத்தில் (முதற்பதிப்பு) முன்னுரையில் திருவள்ளுவர் "சமணர்" என்றும் கடவுள் வாழ்த்து னிச்சயம் சமணம் என்றும் எழுதினார். சில மேடைகளிலும் பேசியுமுள்ளார். ஆனால், அவருடையக் கருத்துக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தவுடன் தன்னுடைய மற்ற பதிப்புகளில் அந்த வாக்கியங்களை சேர்க்காமல் விட்டுவிட்டார்.
ஆனால், திரு.கணேசனார் அவர்கள் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் தன்னுடைய கருத்தை மறைத்துச் சொல்லவில்லை.
எங்களுடையதை எங்களது என்று சொன்ன கணேசனாருக்கு எங்கள் சமூகம் (தமிழ் ஜைனம்) மிக கடமைப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் நிறைய அறிஞர்கள் இருக்கிறார்கள். ஞாபகம் உள்ள வரையில் மயிலை. சீனி.வேங்கடசாமி அவர்கள், பவ்விய சீவன் உ.வே.சா அவர்கள், தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள், திரு. வேணுகோபாலனார் அவர்கள், திரு. வையாபுரி அவர்கள், திரு.கா.நா. சுப்பிரமணியம் அவர்கள், புலவர். செ.இராசு அவர்கள்...... போன்றோர்களுக்கு தமிழ் சமணம் என்றும் என்றும் கடமைப்பட்டுள்ளது.
இரா.பானுகுமார்,
சென்னை.
No comments:
Post a Comment